செய்திகள்

மீஞ்சூர் அருகே வெடிகுண்டு-கத்திகளுடன் 12 ரவுடிகள் கைது

Published On 2018-05-22 08:13 GMT   |   Update On 2018-05-22 08:13 GMT
மீஞ்சூர் அருகே வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் 12 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த கேசவபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் கூலிப்படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்து புகுந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 12 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, 6 பட்டா கத்திகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் பிடி பட்டவர்கள் பிரபல ரவுடியான சேது மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரிந்தது. குற்றச் செயலில் ஈடுபட்ட அவர்கள் திட்டமிட்டு பதுங்கி கண்டுபிடிக்கப்பட்டது. கைதான சேது மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் அருகே திருவெள்ளவாயலில் மனைவியிடம் நகை பறித்ததை தடுத்த ஜெயராமன் என்பவர் கொள்ளை கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சேது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். பிடிபட்ட ரவுடி கும்பல் வேறு எந்த குற்றச் செயலிலாவது ஈடுபட திட்டமிட்டனரா? அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்-யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

Tags:    

Similar News