செய்திகள்

புதுவையில் மதுக்கடையில் மோதல்: வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

Published On 2018-05-21 14:07 GMT   |   Update On 2018-05-21 14:07 GMT
புதுவையில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார்பாளையம் சரவணன் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது26). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று புதுவை சோனாம்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் மதுகுடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மதுகுடித்து கொண்டிருந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர் ராஜேந்திரனுக்கும், பிரபாகரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபாகரனை தாக்கினார். மேலும் ராஜேந்திரன் பீர் பாட்டிலை எடுத்து பிரபாகரனை குத்தினார். இதில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News