செய்திகள்

லாஸ்பேட்டையில் கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை

Published On 2018-05-19 07:02 GMT   |   Update On 2018-05-19 07:02 GMT
லாஸ்பேட்டையில் கல்லூரி உதவி பேராசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் அரவிந்த் (வயது 25). இவர் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.

சிவசுப்பிரமணியனுக்கு புதுவை லாஸ்பேட்டை குமரன் நகரில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு கல்லூரி விடுமுறை நாட்களில் அரவிந்த் வந்து தங்கி செல்வது வழக்கம்.

அதுபோல் நேற்று முன்தினம் நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் அரவிந்த் புதுவைக்கு வந்தார். நேற்று காலை நண்பனின் பிறந்த நாளில் பங்கேற்று விட்டு குமரன் நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுக்க செல்வதாக நண்பர்களிடம் கூறி விட்டு அரவிந்த் வந்தார்.

மாலையில் அனைவரும் ஜவுளி கடைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் வெகுநேரமாக அரவிந்த் வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் குமரன் நகரில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

அப்போது வீட்டில் மின் விசிறியில் நைலான் கயிற்றால் அரவிந்த் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வழக்கு பதிவு செய்து அரவிந்த் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
Tags:    

Similar News