செய்திகள்

மதுரையில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2018-05-18 18:03 IST   |   Update On 2018-05-18 18:03:00 IST
மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை:

மதுரை பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர், 8-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சண்முகப்பாண்டி (வயது 23).

பிரபல ரவுடியான சண்முகப்பாண்டி மீது மதுரை நகரில் நகைபறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சண்முகப்பாண்டி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுரை நகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

இதையடுத்து சண்முகப் பாண்டி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News