செய்திகள்

பேராவூரணி அருகே மினி பஸ்சில் இருந்து விழுந்து பெண் காயம்

Published On 2018-05-16 16:35 GMT   |   Update On 2018-05-16 16:35 GMT
பேராவூரணி அருகே மினி பஸ்சில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேராவூரணி:

பேராவூரணியை அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 62), கூலி தொழிலாளி.

இவர் முடச்சிக்காட்டில் உள்ள தனது மகள் வீடு சென்று விட்டு, ஊர் திரும்புவதற்காக முடச்சிக்காடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வீரம்மாள், அவ்வழியே வந்த மினி பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த வீரம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல்சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து வீரம்மாளின் மகன் தனபால் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News