செய்திகள்

கோபி அருகே முதியோர் இல்லத்தில் பெண் திடீர் மாயம்

Published On 2018-05-14 10:22 GMT   |   Update On 2018-05-14 10:22 GMT
ஈரோடு மாவட்டம் கோபி அருகே முதியோர் இல்லத்தில் இருந்த பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் முதியோர் இல்லம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த இல்லத்தில் ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.

பவானி பெரிய புலியூரை சேர்ந்த ரத்தினம் (வயது 60) என்பவரும் இங்கு தங்கி இருந்தார். நேற்று மதியம் அவர் வெளியே சென்றார்.

ஆனால் அவர் முதியோர் இல்லத்துக்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அவர் மாயமானது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் முதியோர் இல்ல நிர்வாகி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரத்தினத்தை தேடி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News