செய்திகள்

வேளச்சேரியில் லாட்ஜில் சூதாட்டம் - 5 பேர் கைது

Published On 2018-05-14 09:57 GMT   |   Update On 2018-05-14 09:57 GMT
வேளச்சேரியில் லாட்ஜில் சூதாட்டமாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் உள்ள லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் லாட்ஜில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது 4 அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டையை சேர்ந்த ஜான்சன், புரசைவாக்கத்தை சேர்ந்த ஜோசப், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த முத்து, குன்றத்தூரை சேர்ந்த வெங்கடேஷ், கொளத்தூர் கங்கேஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூதாட்டம் நடந்த லாட்ஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலரான இவர் தினகரன் ஆதரவாளர் ஆவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளார்.

Tags:    

Similar News