செய்திகள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு கண்காட்சி - அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்

Published On 2018-05-12 21:38 IST   |   Update On 2018-05-12 21:38:00 IST
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஒருமாத காலம் நடைபெற உள்ள உணவு பாதுகாப்பு கண்காட்சியை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
சிவகங்கை:

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த கண்காட்சி மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கண்காட்சியை தொடங்கி வைத்து விளம்பர பலகையை வணிகர்களுக்கு வழங்கி னார்.

நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சுந்தரபோஸ், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், செல்லத்துரை, தியாகராஜன், ராஜேஷ், முத்தமிழ், சாலைப்பாண்டியன், ஜோதிபாஸ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:- கோடை காலங்களில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் இந்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் 4 வாரங்களுக்கு இந்த சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டுஉள்ளது. பொதுமக்கள் கோடை காலத்தில் அதிகஅளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் தேவையற்ற உணவுகளை வெப்பமான இந்த சூழ்நிலையில் உட்கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News