செய்திகள்

சிவகிரி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-05-03 19:38 IST   |   Update On 2018-05-03 19:38:00 IST
சிவகிரி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து தென்காசி ஆர்.டி.ஓ விசாரணை நடத்துகிறார்.
சிவகிரி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சேகர் மனைவி குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே மலைப்பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலுக்காக வந்தனர். வந்த  இடத்தில் சேகர் மனைவியை சமையல் செய்யுமாறு கூறினாராம். அதற்கு அம்மு உடல்நிலை சரியில்லை என கூறி படுத்துவிட்டாராம். 

இதனால் அவரை சேகர் கண்டித்தார். இதில் மன வேதனை அடைந்த சேகர் விஷத்தை குடித்துவிட்டார். மயங்கி கிடந்த அவரை சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். வழியிலேயே அம்மு பரிதாபமாக இறந்தார். 

இதுபற்றி சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். அம்முவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா என்று தென்காசி ஆர்.டி.ஓ விசாரணை நடத்துகிறார்.

Similar News