செய்திகள்

பேரையூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2018-05-02 10:06 GMT   |   Update On 2018-05-02 10:06 GMT
பேரையூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பி. தொட்டியபட்டியை சேர்ந்தவர் கூடலிங்கம். இவரது மனைவி முனியம்மாள் (வயது 65).

இவர் நேற்று காலை சின்னபூலாம்பட்டி பகுதியில் காட்டுவேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் முனியம்மாள் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் முனியம்மாளை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News