செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-04-13 16:12 GMT   |   Update On 2018-04-13 16:12 GMT
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கந்தர்வக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கந்தர்வக்கோட்டை:

கந்தர்வக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கந்தர்வக்கோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்க்கு வட்டாரத் தலைவர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். செயலர் துரையரசன், துணைச் செயலர் சேகர், பொருளாளர் சண்முகம்,  மாவட்ட பொருளாளர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி மாநில பொதுக்  குழு உறுப்பினர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வக்கோட்டை வட்டாரக் கிளையை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News