செய்திகள்
ஈரோட்டில் கல்லூரி மாணவி மாயம் - போலீசில் புகார்
ஈரோட்டில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை:
ஈரோடு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன சுந்தரம். இவருக்கு திவ்யா (வயது 21) என்பவருக்கும் 3 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு தன் மனைவி திவ்யாவை பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் கணவர் படிக்க வைத்தார். அவர் பி.ஏ. வரலாறு படித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 19-ந் தேதி திவ்யா விஜயமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையே கடந்த 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற திவ்யா திடீரென மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான திவ்யாவை தேடி வருகிறார்கள்.
ஈரோடு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன சுந்தரம். இவருக்கு திவ்யா (வயது 21) என்பவருக்கும் 3 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு தன் மனைவி திவ்யாவை பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் கணவர் படிக்க வைத்தார். அவர் பி.ஏ. வரலாறு படித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 19-ந் தேதி திவ்யா விஜயமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையே கடந்த 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற திவ்யா திடீரென மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான திவ்யாவை தேடி வருகிறார்கள்.