செய்திகள்

ஈரோட்டில் கல்லூரி மாணவி மாயம் - போலீசில் புகார்

Published On 2018-04-11 16:30 IST   |   Update On 2018-04-11 16:30:00 IST
ஈரோட்டில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை:

ஈரோடு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன சுந்தரம். இவருக்கு திவ்யா (வயது 21) என்பவருக்கும் 3 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு தன் மனைவி திவ்யாவை பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் கணவர் படிக்க வைத்தார். அவர் பி.ஏ. வரலாறு படித்து வந்தார்.

இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 19-ந் தேதி திவ்யா விஜயமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதற்கிடையே கடந்த 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற திவ்யா திடீரென மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான திவ்யாவை தேடி வருகிறார்கள்.

Similar News