செய்திகள்

புஞ்சை புளியம்பட்டி அருகே கர்நாடக அரசு பஸ் மீது நள்ளிரவில் கல் வீச்சு

Published On 2018-04-11 11:41 IST   |   Update On 2018-04-11 11:41:00 IST
புஞ்சை புளியம்பட்டி அருகே கர்நாடக அரசு பஸ் மீது நள்ளிரவில் கல் வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பு.புளியம்பட்டி:

பெங்களூருவில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கோவைக்கு நேற்று இரவு கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ் நள்ளிரவு 12 மணி அளவில் பு.புளியம்பட்டி அடுத்த புதுப்பாளையம் பிரிவில் வந்த போது இருளில் பதுங்கி இருந்த ‘மர்ம’ ஆசாமிகள் அந்த பஸ் மீது கற்கள் வீசினர்.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடைய வில்லை. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு புஞ்சை புளியம்பட்டி போலீசார் விரைந்தனர். பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி பஸ் மீது கற்களை வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News