செய்திகள்

கோபியில் அரசு பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2018-04-10 10:55 IST   |   Update On 2018-04-10 10:55:00 IST
கோபியில் அரசு பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 35). கூலி தொழிலாளி. அடி-தடி தகராறில் காயத்துடன் சிகிச்சை பெற பூபதி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அவருடன் அவரது நண்பர் செல்ல பாண்டியன் என்பவரும் வந்திருந்தார். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

காயம் அடைந்த பூபதிக்கு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மாலினி தையல் போட்டு சிகிச்சை அளித்தார்.

அப்போது பெண் டாக்டர் மற்றும் அங்குள்ள ஊழியர்கள் கனகராஜ், சண்முக சுந்தரம், ஈஸ்வரன் ஆகியோருக்கும் பூபதி, செல்லபாண்டியன் ஆகியோருக்கும் இடையே திடீர் தகராறு- வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் பெண் டாக்டர் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆஸ்பத்திரி ஊழியர் ஈஸ்வரன் கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் பூபதி மற்றும் செல்ல பாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

Similar News