செய்திகள்

உத்திரமேரூர் அருகே கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பம்- வாலிபர் தப்பி ஓட்டம்

Published On 2018-04-05 15:20 IST   |   Update On 2018-04-05 15:20:00 IST
உத்திரமேரூர் அருகே 14 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

மதுராந்தகத்தை அடுத்த கிளியானூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபர் உத்திரமேரூர் அருகே உள்ள கடச்சவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகினார். இதில் சிறுமி கர்ப்பமானார். தற்போது அவர் 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வாலிபரின் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்ப்பமான சிறுமிக்கும் வாலிபருக்கும் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த வாலிபர் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகிறார்கள். #Tamilnews

Similar News