செய்திகள்
கோப்பு படம்

மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் ராணுவ கண்காட்சி

Published On 2018-03-22 07:43 GMT   |   Update On 2018-03-22 07:43 GMT
மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ராணுவ கண்காட்சி அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் பாதுகாப்பு கருதி அங்குள்ள விடுதி, ரிசார்ட்டுகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்த மாதம் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ராணுவ கண்காட்சி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ராணுவ கண்காட்சியையொட்டி பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகள், ரிசார்ட்டுகளின் உரிமையாளர்களுடன் போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதிகளில் தங்க வருவோரிடம் ஆதார் கார்டு கண்டிப்பாக வாங்க வேண்டும். அதை உடனடியாக பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பாஸ்போர்ட் வாங்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும். விடுதியில் கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் டி.எஸ்.பி.சுப்புராஜ், இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News