வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது45). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் தனது மனைவி ராணி (40), மகன் காளிதாஸ் (18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிளிலும் வந்த 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணையன் பரிதாபமாக இறந்தார்.
மேலும் கண்ணையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த அவரது மனைவி ராணி, மகன் காளிதாஸ் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அன்புமுருகன், முகமது உமர்பாரூக் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #tamilnews
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தினர்.