பெருந்துறை அருகே கிராவல் மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
பெருந்துறை:
பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம், கொங்கம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டியெடுப்பதாக பெருந்துறை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது.
பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுஅந்த வழியாக வந்த கிராவல் மண்லோடு ஏற்றிய டிப்பர் லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு அந்த லாரியின் டிரைவர் சென்னிமலை காளிக்கா வலசுபகுதியை சோந்த செல்வராஜிடம் மேற்கொண்ட விசாரணையில் விஜயமங்கலம் அருகேயுள்ள தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த வேலுமணி என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும், அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து சென்றதும் தெரிய வந்தது.
இந்த லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் பெருந்துறை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதே போல் பெருந்துறை, பெத்தாம்பாளையம் ரோடு, சீலம்பட்டி பகுதியல் பெருந்துறை துணை தாசில்தார் முருகேசன் அந்த வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அந்த லாரிகள் திங்களூர் அருகேயுள்ள சிறுவலூர் பகுதியில் உள்ளகுட்டையில் இருந்துகிராவல் மண் வெட்டி எடுத்து வந்ததும், லாரியின் உரிமையாளர்கள் அந்தியூர் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த கணேசன் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு சொந்தமானது என்றும் லாரியின் டிரைவர்கள் தினேஷ்குமார்மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து பெருந்துறை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். #tamilnews