செய்திகள்

காஞ்சிகோவில் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2018-02-14 18:50 IST   |   Update On 2018-02-14 18:50:00 IST
திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை:

பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் கொண்டடையன் காட்டு வலசு பகுதியை சேர்ந்த அம்மணியம்மாள் என்பவரது மகன் ராஜேந்திரன் (வயது 38).

இவர் காஞ்சிக்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ரைஸ் மில்லில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் அன்னூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கவிதா (20) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். நேற்று மதியம் ராஜேந்திரன் வீட்டிற்கு சாப்பிட வந்து விட்டு மீண்டும் ரைஸ் மில்லிற்கு சென்றுள்ளார். ராஜேந்திரனின் தாயார் அம்மணியம்மாள் அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட் டார்.

பின்னர் இரவு 7 மணியளவில் அம்மணியம்மாள் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக தாழிட்டு இருந்தது. அவர் கதவை தட்டி னார். ஆனால் வீட்டிற்குள் இருந்த கவிதா கதவை திறக்காததால் அருகில் உள்ள உறவினர் மோகன் குமாரிடம் இது குறித்து கூறினார்.

மோகன்குமார் அங்கு வந்து கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கவிதா தனது சேலையால் மேற் கூரையில் உள்ள பேனில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி யடைந்த அவர்கள் உடனடி யாக கவிதாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கவிதாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் கவிதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Similar News