செய்திகள்

நாகை அருகே விவசாயியை எரித்து கொன்ற மனைவி: கள்ளக்காதலன் கைது

Published On 2018-02-13 22:00 IST   |   Update On 2018-02-13 22:00:00 IST
நாகை அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற கணவனை மனைவியும் அவரது கள்ளகாதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
திருமருகல்:

காரைக்கால் மாவட்டம் ஊதியபத்து கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் மகேந்திரன் (வயது 38). விவசாயி. இவருக்கு கீதா (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மகேந்திரனுக்கும், அவரது அண்ணன் கந்தவேலுக்கும் சொந்தமான விவசாய நிலம் நாகை மாவட்டம் திட்டசேரி அருகே உள்ள அருள்மொழிதேவன் கிராமத்தில் உள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன் தினம் நள்ளிரவில் அருள் மொழிதேவன் கிராமத்தில் வயலுக்கு மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சுவதற்காக மகேந்திரன் புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது மனைவி கீதா, அருள்மொழிதேவன் கிராமத்தில் உள்ள கந்தவேலிடம், தகவலை கூறினார். இதையடுத்து அவரும் தம்பியை பல இடங்களில் தேடி பார்த்தார்.

இதற்கிடையே அப்பகுதியில் உள்ள நரிதின்ன வாய்க்கால் கரையோரத்தில் மகேந்திரன் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திட்டசேரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் விவசாயி மகேந்திரனை எரித்து கொன்றது யார்? என போலீசார் விசாரணையை தொடங்கினர்.

போலீசார், மகேந்திரனின் மனைவி கீதாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அப்போது அவரது செல்போனை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். இதில் ஹரிஹரன் என்ற வாலிபரிடம் கீதா பேசியது தெரிய வந்தது. நள்ளிரவில் ஏன் வாலிபரிடம் பேச வேண்டும்? என்று கீதாவிடம் விசாரித்த போது அவர் கள்ளக்காதலன் ஹரி ஹரனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் கீதா போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் ஊதியபத்து கிராமத்தை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் ஹரிஹரன் (வயது 30) என்பவர் எனது கணவர் மகேந்திரனின் நண்பர் ஆவார். இதனால் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வந்து செல்வார். இதில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக கணவருக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்தோம்.

இதற்கிடையே எங்களது கள்ளத்தொடர்பு கணவர் மகேந்திரனுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார்.

இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வந்ததால் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். இதை ஹரிஹரனிடம் கூறினேன். அவரும் கொலை செய்ய ஒத்துகொண்டார்.

அதன்படி நள்ளிரவில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச கணவர் புறப்பட்டு சென்ற போது நான் உடனே கள்ளக்காதலன் ஹரிஹரனுக்கு செல்போனில் தகவல் கொடுத்தேன். உடனே அவரும் அருள்மொழி தேவன் கிராமத்துக்கு புறப்பட்டார்.

அங்கு கணவர் மகேந்திரனை சந்தித்து ஹரிஹரன் பேசினார். அப்போது நரிதின்ன வாய்க்கால் அருகே திடீரென கணவர் மகேந்திரனை, ஹரிஹரன் கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இதன்பின்னர் மகேந்திரன் உடலில் டீசலை ஊற்றி எரித்து விட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தால் ஹரிஹரனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து கள்ளக்காதலன் ஹரிஹரன், கீதா ஆகியோரை திட்டசேரி போலீசார் கைது செய்தனர். #tamilnews

Similar News