பவானி அருகே விபத்து: இளம்பெண் பலி
பவானி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஏர்பட்டி காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் பட்சியப்பன். இவரது மனைவி சித்ரா (வயது 20).
கணவரும் மனைவியும் கோவையில் நடந்த விஷேசத்தில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பவானி அருகே வந்த போது பின்னால் வந்த அரசு டவுன் பஸ்சும் மோட்டார் சைக்கிளும் மோதின. விபத்து நடந்ததும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் அத்தாணியை சேர்ந்த கோபால்சாமி (40) பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார்.
பஸ் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பட்சியப்பனும், சித்ராவும் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்த சித்ரா அரசு பஸ்சின் பின் பக்க சக்கரத்தில் சிக்கினார்.
பட்சியப்பனின் கண் எதிரே அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சித்ரா பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சித்ராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் கோபால்சாமியை தேடி வருகிறார்.