செய்திகள்

குத்தாலம் அருகே பஸ்சை நிறுத்தாத கண்டக்டர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

Published On 2018-02-12 17:30 IST   |   Update On 2018-02-12 17:32:00 IST
குத்தாலம் அருகே பஸ்சை நிறுத்தாத கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நாகை மாவட்டம் மங்கைநல்லூருக்கு செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன் (வயது 40).இவர் திருவிடைமருதூரை அடுத்த பிள்ளையார் பேட்டையை சேர்ந்தவர்.

இவர் நேற்று மாலை வழக்கம் போல் பஸ்சில் பணியில் இருந்தார். அந்த பஸ் குத்தாலத்தை அடுத்த கத்திரி மூலைப்பகுதியில் நிற்காமல் சென்றதால் அதில் பயணம் செய்த கத்திரி மூலையை சேர்ந்த கஜேந்திரன் (28), கனகசபை (32) ஆகிய இருவரும் கண்டக்டர் கார்த்திகேயனுடன் தகராறு செய்தனர்.

பின்னர் அவரை கீழே இழுத்து அடித்துள்ளனர். இதில் கார்த்திகேயனின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இது பற்றி அவர் பாலையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் வழக்கு பதிவு செய்து கண்டக்டரை தாக்கிய 2 பேரையும் கைது செய்தார்.

இந்த சம்பவம் பஸ் பயணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News