செய்திகள்

மின் தடையை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2018-02-10 20:36 IST   |   Update On 2018-02-10 20:36:00 IST
பொன்னமராவதியில் சந்தை நாளான சனிக்கிழமையன்று மின்தடை செய்யும் மின்வாரியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி:

பொன்னமராவதியில் சந்தை நாளான சனிக்கிழமையன்று மின்தடை செய்யும் மின்வாரியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டி செயலர் குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாகராஜன், சேக் தாவூத், பாலாஜி ,கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய செயலர் பக்ருதீன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பிரதாப்சிங் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாவலர், சிங்காரம், பிச்சையம்மாள், மாயழகு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் பிச்சை நன்றி கூறினார். #tamilnews

Similar News