செய்திகள்

அண்ணா பல்கலையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி: 2 பேர் கைது

Published On 2018-02-04 18:35 IST   |   Update On 2018-02-04 18:35:00 IST
அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த 2 பேரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் சக்கராப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரை இலுப்பூர் பகுதியை சேர்ந்த குமாரசாமி, மலைராஜா ஆகியோர் அணுகினர். அவர்கள் ரவிச்சந்திரனிடம், உங்களது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருகிறோம். அதற்கு நீங்கள் ரூ.3½ லட்சம் தர வேண்டும் என்றனர்.

இதையடுத்து ரவிச்சந்திரன், 2பேரிடமும் ரூ.3½ லட்சம் பணத்தை கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட இருவரும், ரவிச்சந்திரனின் மகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு வருடம் ஆகியும் அந்த வேலை நிரந்தரமாக்கப்படவில்லை.

இது குறித்து ரவிச்சந்திரன், குமாரசாமி, மலைராஜாவிடம் முறையிட்டுள்ளார். மேலும் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனராம்.இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிச்சந்திரன் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 2பேரையும் கைது செய்தனர்.

பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கியதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Similar News