செய்திகள்
மேல் மருவத்தூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: கவர்னர் பங்கேற்பு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றிவைத்தார்.
மேல்மருவத்தூர்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றிவைத்தார். விழாவையொட்டி சித்தர் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தைப்பூச சக்தி மாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து இரு முடி எடுத்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
முன்னதாக சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாரை பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். விழாவில் பா.ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் அருள்மொழி, கவர்னரின் நேர்முக உதவியாளர் ராஜகோபால் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றிவைத்தார். விழாவையொட்டி சித்தர் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தைப்பூச சக்தி மாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து இரு முடி எடுத்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
முன்னதாக சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாரை பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். விழாவில் பா.ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் அருள்மொழி, கவர்னரின் நேர்முக உதவியாளர் ராஜகோபால் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews