செய்திகள்

திருமங்கலம் அருகே திருமணமான 1½ வருடத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2018-01-30 09:10 GMT   |   Update On 2018-01-30 09:10 GMT
திருமங்கலம் அருகே திருமணமான 1½ வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள பாரபத்தியைச் சேர்ந்தவர் வைரன். இவரது மகள் கவிதா (வயது 22) பி.காம். பட்டதாரி. இவருக்கும் சிவகாசி மத்திய சேனை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்வருக்கும் கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் புதுமணத் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கவிதா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அவருக்கு பெற்றோர் அறிவுரை கூறி கணவர் வீட்டுக்கு செல்லுமாறு கூறினர்.

இந்த நிலையில் கவிதா வி‌ஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கவிதா பரிதாபமாக இறந்தார். கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News