செய்திகள்

காதல் திருமணம் செய்த ஜவுளி வியாபாரி தற்கொலை

Published On 2018-01-21 16:37 GMT   |   Update On 2018-01-21 16:37 GMT
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மன முடைந்த ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு சம்பத்நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ் (வயது37). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சாகிராபானா (32).இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிபீகா என்ற மகள் உள்ளார்.

வெங்கடேஷ்சுக்கு குடி பழக்கம் உண்டாம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் மீண்டும் கணவன்-மனைவிக்குள் தகராறு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வெங்கடேஷ் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த வெங்கடேஷ் திடீரென தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கணவர் வெங்கடேஷ் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News