செய்திகள்

இளையான்குடி அருகே வீடு புகுந்து நகை கொள்ளை: மற்றொரு வீட்டில் திருடியவர் கைது

Published On 2018-01-12 21:41 IST   |   Update On 2018-01-12 21:41:00 IST
இளையான்குடி அருகே வீடு புகுந்து பீரோவில் இருந்த 3¾ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். மற்றொரு வீட்டில் திருடியவரை கைது செய்தனர்.

சிவகங்கை:

இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு ரோட்டைச் சேர்ந்தவர் முத்துமாரி. சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவை திறந்து அதில் இருந்த 3¾ பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினார்.

இது குறித்த புகாரின் பேரில் சாலை கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

காளையார் கோவில் அருகே உள்ள ஆண்டிச்சி ஊரணியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். சம்பவத்தன்று இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் பீரோவை திறந்து 2½ பவுன் நகையை திருடினார். அப்போது வீட்டுக்குள் வந்த செல்வமுருகன் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து காளையார்கோவில் போலீசில் ஒப்படைத்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் விசாரணை நடத்தியதில் நகையை திருடியது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அருண் அலெக்ஸ் (வயது 22) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கைதான அருண் அலெக்ஸ் இளையான் குடியில் தனியார் செங்கல் சூலையில் வேலை பார்த்து வருகிறார். #tamilnews

Similar News