செய்திகள்
நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி
நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் பவானி அருகே அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மாயிலம்பாடி ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 39). அரசுபோக்குவரத்து கழக கிளை பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இவர் தி.மு.க. தொழிற்சங்க உறுப்பினர் ஆவார். தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
வேலைக்கு போகாமல் இருந்த அவரை பணிக்கு வரச்சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தனர்.
இதனால் தேவராஜ் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் வீட்டில் இருந்தபோது இதையே எண்ணி மனவருத்தத்தில் இருந்தார்.
திடீரென அவர் அப்படியே மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பில் இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ் டிரைவர் திடீர் மாரடைப்பில் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மாயிலம்பாடி ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 39). அரசுபோக்குவரத்து கழக கிளை பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இவர் தி.மு.க. தொழிற்சங்க உறுப்பினர் ஆவார். தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
வேலைக்கு போகாமல் இருந்த அவரை பணிக்கு வரச்சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தனர்.
இதனால் தேவராஜ் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் வீட்டில் இருந்தபோது இதையே எண்ணி மனவருத்தத்தில் இருந்தார்.
திடீரென அவர் அப்படியே மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பில் இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ் டிரைவர் திடீர் மாரடைப்பில் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.