செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 71 மதுபான பார்கள் மூடப்பட்டு கிடக்கிறது: ‘குடி’மகன்கள் அவதி

Published On 2018-01-02 15:33 IST   |   Update On 2018-01-02 15:33:00 IST
ஈரோடு உள்படமாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மதுபான கடைகளில் பார்கள் செயல்படாததால் குடிமகன்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 175 டாஸ்மாக் மது பானக்கடைகள் உள்ளன. இதில் ‘பார்’ (குடிப்பதற்கு வசதியாக) வசதி கொண்ட மதுக்கடைகள் 76 உள்ளன,

“பார்”வசதி கொண்ட கடைகளில் குடிமகன்கள் வந்து மிகவும் சவுகரியமாக உட்கார்ந்து வேண்டிய நொறுக்கு தீனிகளை (சுண்டல், ஆம்லட், ஆப் பாயில், சிக்கன் சில்லி, மீன் வறுவல், கொய்யா, வெள்ளரி) வாங்கி சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

வீடுகளுக்கு மது பாட்டில்களை வாங்கி கொண்டுபோய் குடித்தால் அங்கு ‘அடி’ விழும் என்பதால்பெரும்பாலான மது பிரியர்கள் “பார்” வசதி கொண்ட மதுக்கடைகளையே விரும்புகிறார்கள்.

தற்போது மதுகடைகளில் உள்ள பார்களின் உரிமத்தை பார் உரிமையாளர்கள் புதுப்பிக்காததால் தமிழ்நாட்டில் ஏராளமான மதுபான பார்கள் மூடப்பட்டு கிடக்கிறது.

தமிழகம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட பார்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு கிடக்கிறது.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பார்வசதி கொண்ட 75 கடைகளில் 5 கடைகள் மட்டுமே உரிமத்தை புதுப்பித்து உள்ளன. மீதி உள்ள 71 பார்களின் உரிமையாளர்கள் பார்களை புதுப்பிக்காததால் அவை மூடப்பட்டு கிடக்கிறது.

இதுபற்றி ஈரோடு மாவட்ட டாஸ்மார்க் பொது மேலாளர் தேவிகாராணி ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 175 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 76 கடைகளில் பார்வசதி உள்ளது. இதில் 5 பேர் மட்டுமே பார்களை புதுப்பித்துள்ளனர். மீதி உள்ள 71 பார்கள் மூடப்பட்டு கிடக்கின்றன.

நவம்பர் மாதமே டெண்டர் முடிந்துவிட்டது. டிசம்பர்மாத கடைசிவரை பார்களின் உரிமைதாரர்களுக்கு உரிமைகளை புதுப்பிக்க கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் புதுப்பிக்காததால் பார்கள் மூடப்பட்டு உள்ளது. அரசு நடவடிக்கை என்னவோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் அரசு சொல் படி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு தேவிகாராணி கூறினார்.

ஈரோடு உள்படமாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மதுபான கடைகளில்பார்கள் செயல்படாததால் குடிமகன்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

கடைகளில் பாட்டில்களை வாங்கி கொண்டு எங்கேயாவது ஒதுக்குப்புற இடம் உள்ளதா? என நா(தே)டி ஒடுகிறார்கள். இதனால் பெரும்பாலான பொது இடங்கள் திறந்த வெளி “பார்”ஆக மாறிவருகிறது.

Similar News