செய்திகள்

திண்டிவனம் அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2017-12-28 17:21 GMT   |   Update On 2017-12-28 17:21 GMT
திண்டிவனம் அருகே கல்லேரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே தாதாபுரத்தில் கல்லேரி அம்மன் கோவிலுக்குள் மர்மநபர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். 

இது குறித்த வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News