பெருந்துறை அருகே கல்லூரியில் திடீர் தீ விபத்து: 8 கம்ப்யூட்டர்கள் எரிந்தன
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி கவுண்டன் பாளையம் பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் மெயின் பிளாக்கிற்கு பின் பகுதியில் 2-வது தளத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் இருந்து கரும் புகை வந்தது. அங்கு சென்று பார்த்த போது கம்ப்யூட்டர்கள் தீப் பிடித்து எரிவது தெரியவந்தது. இது தொடர்பாக பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள் சுமார் ஒரு அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்த 8 கம்ப்யூட்டர்கள், மேற்கூரையின் சீலிங், ஏசி மெஷின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
ஏசி மெஷினில் ஏற்பட்ட மின் கசிவே இந்த தீ விபத் திற்கு காரணமாக இருக்கக் கூடும் என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.