செய்திகள்
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: வாய்க்காலுக்கு தண்ணீர் நிறுத்தம்
நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கு இன்று முதல் தண்ணீர் வரத்து மிதமான அளவில் அதிகரித்துள்ளது.
ஈரோடு:
நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் தண்ணீர் வரத்து மிதமான அளவில் அதிகரித்துள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1764 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையின் நீர்மட்டம் 71.89 அடியாக உள்ளது.அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை, காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களுக்கு 3 கட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 30-ந் தேதி முதல் மீண்டும் 4-வது கட்டமாக வாய்க்காலுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் தண்ணீர் வரத்து மிதமான அளவில் அதிகரித்துள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1764 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையின் நீர்மட்டம் 71.89 அடியாக உள்ளது.அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை, காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களுக்கு 3 கட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 30-ந் தேதி முதல் மீண்டும் 4-வது கட்டமாக வாய்க்காலுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.