செய்திகள்

பெருந்துறையில் நள்ளிரவில் பேக்கரி கடையில் திடீர் தீ விபத்து

Published On 2017-12-13 17:00 IST   |   Update On 2017-12-13 17:00:00 IST
பெருந்துறையில் நள்ளிரவில் பேக்கரி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெருந்துறை:

பெருந்துறை அண்ணா சிலை அருகே ஒரு தனியார் பேக்கரி உள்ளது. கடை மேலாளராக மனோஜ் உள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் மேலாளர் மனோஜ் பேக்கரியை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். தொழிலாளர்கள் யாரும் கடையில் தங்காமல் சென்று விட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் 12 மணிக்கு பேக்கரியில் உள்ள பிரிட்ஜ் சூடாகி மின் கசிவு ஏற்பட்டு தீபிடித்து எரிந்தது.

இதில் பிரிட்ஜ் மற்றும் வெளியேவைக்கப்பட்டி ருந்த பன், கேக் போன்ற பொருட்கள் எரிந்து குபு... குபு...வென புகை வெளியேறியது.

இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

நிலைய வீரர் வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News