செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர்

Published On 2017-12-13 06:53 GMT   |   Update On 2017-12-13 06:53 GMT
காஞ்சீபுரம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி கோவிலில் திருமணம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த தாயார்குளம், ஒத்தவாடை பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் அது காதலாக மாறியது. ஆட்டோ டிரைவர் மாணவியின் வீட்டுக்கு குடிநீர் கேன் சப்ளை செய்த போது நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரை பெற்றோர் தேடி வந்தனர். இது குறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதற்கிடையே காஞ்சீபுரத்தை அடுத்த ஆறுபாக்கம் ரெட்டேரி பிள்ளையார் கோவில் அருகே மாயமான மாணவியுடன் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் திருமண கோலத்தில் நின்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாகரல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை கண்டதும் ஆட்டோ டிரைவருடன் நின்ற நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த மாணவியை மீட்டனர்.

மேலும் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மாணவி தனக்கு 18 வயது நிறைவடைந்து விட்டதாகவும், காதலனுடன் செல்வதாகவும் கூறி வருகிறார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News