செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் விடிய-விடிய சாரல் மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய-விடிய பல்வேறு இடங்களில் சாரல்மழை பெய்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய-விடிய பல்வேறு இடங்களில் சாரல்மழை பெய்து வருகிறது. இன்று காலையும் ஈரோடு, சென்னிமலை, மொடக்குறிச்சி உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாகவே வானம் இருட்டியபடியே உள்ளது. கனமழை கொட்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் சாரல் மழையே பெய்து வருகிறது.
அதே சமயம் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் வாட்டுகிறது. ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று காலை பலத்த மழைபெய்வது போல் கருமேகக் கூட்டங்கள் திரண்டன. ஆனால் சாரல்மழை மட்டுமே பெய்து வருகிறது.
இதேபோல் ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளான தாளவாடி, திம்பம், கேர்மாளம், கடம்பூர், குண்டேரிபள்ளம் அணைப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு மொடக்குறிச்சி கொடுமுடி பெருந்துறை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 7.மி.மீ மழையும் கொடுமுடியில் 4 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய-விடிய பல்வேறு இடங்களில் சாரல்மழை பெய்து வருகிறது. இன்று காலையும் ஈரோடு, சென்னிமலை, மொடக்குறிச்சி உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாகவே வானம் இருட்டியபடியே உள்ளது. கனமழை கொட்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் சாரல் மழையே பெய்து வருகிறது.
அதே சமயம் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் வாட்டுகிறது. ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று காலை பலத்த மழைபெய்வது போல் கருமேகக் கூட்டங்கள் திரண்டன. ஆனால் சாரல்மழை மட்டுமே பெய்து வருகிறது.
இதேபோல் ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளான தாளவாடி, திம்பம், கேர்மாளம், கடம்பூர், குண்டேரிபள்ளம் அணைப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு மொடக்குறிச்சி கொடுமுடி பெருந்துறை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 7.மி.மீ மழையும் கொடுமுடியில் 4 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.