கோபி அருகே வாட்ச்மேன் விஷம் குடித்து தற்கொலை
கோபி:
கோபி அடுத்த கெட்டிச் செவியூரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 48). இவரது மனைவி கவிதா (வயது 40).
தர்மலிங்கம் கோபியில் உள்ள நுகர்வோர் வாணிக கழக வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தர்மலிங்கத்துக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை மேற்கொண்டார். எனினும் குணமாகவில்லை கூறப்படுகிறது. இதனால் தர்மலிங்கம் மனவேதனையில் இருந்துள்ளார். அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்று வீட்டுக்கு வந்த தர்மலிங்கம் வாந்தி எடுத்தார். இது குறித்து கவிதா தர்மலிங்கத்திடம் கேட்ட போது தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கவிதா தனது உறவினர்களுடன் தர்மலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.