செய்திகள்

திருமணத்துக்கு மறுத்ததால் காதலிக்கு கொலை மிரட்டல்: என்ஜினீயர் கைது

Published On 2017-11-19 16:28 IST   |   Update On 2017-11-19 16:29:00 IST
திருமணத்துக்கு மறுத்ததால் காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழிங்கநல்லூர்:

நீலாங்கரை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாபு, தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாபுவிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாபு, காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டினார்.

இது குறித்து பெண்ணின் பெற்றோர் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் பாபுவை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்த போது திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து பாபு மீது வழக்குப்பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News