செய்திகள்

மதுராந்தகத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்

Published On 2017-11-16 10:02 GMT   |   Update On 2017-11-16 10:03 GMT
மதுராந்தகம்- தச்சூர் சாலையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் தச்சூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News