செய்திகள்

சோழத்தரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2017-11-15 17:41 IST   |   Update On 2017-11-15 17:41:00 IST
சோழத்தரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீர்பாட்சா, சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று இரவு சோழத்தரம் அருகேஉள்ள வடக்கு பாளையங்கோட்டையில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. போலீசார் லாரியை மறித்து குளத்தன்குறிச்சியை சேர்ந்த டிரைவர் தர்மராஜ்(வயது 26) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அனுமதி பெறாமல் லாரியில் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் மணல் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் தர்மராஜை கைது செய்தனர்.

Similar News