செய்திகள்
கடலூர் மாவட்டத்தை கலக்கிய புதுவையை சேர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் 7 பேர் கைது
புதுவையை சேர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, நெய்வேலி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தொழுதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் அந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வழிப்பறி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் கூறிய தகவலின் பேரில் கல்லூர் மாரியம்மன் கோவில் அருகே பதுங்கியிருந்த மேலும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர்கள் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 21), தவளக்குப்பம், தானம்பாளையம், நல்லவாடு சாலை, அபிஷேகபாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில், திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் உள்ள கொரக்கை, ஆலம்பாடி ரோடு, இடைச்செருவாய் ஏரிக்கரை, கோடங்குடி, அருகேரி, பெண்ணாடம் ஆகிய இடங்களில் தனியாக செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், மோட்டார் சைக்கிளில் சென்றும் நகையை வழிப்பறி செய்து சென்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் சமீபத்தில் திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் இவர்கள் இத்தகைய வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 ¾ பவுன் நகை, 2 செல்போன், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, நெய்வேலி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தொழுதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் அந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வழிப்பறி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் கூறிய தகவலின் பேரில் கல்லூர் மாரியம்மன் கோவில் அருகே பதுங்கியிருந்த மேலும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர்கள் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 21), தவளக்குப்பம், தானம்பாளையம், நல்லவாடு சாலை, அபிஷேகபாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில், திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் உள்ள கொரக்கை, ஆலம்பாடி ரோடு, இடைச்செருவாய் ஏரிக்கரை, கோடங்குடி, அருகேரி, பெண்ணாடம் ஆகிய இடங்களில் தனியாக செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், மோட்டார் சைக்கிளில் சென்றும் நகையை வழிப்பறி செய்து சென்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் சமீபத்தில் திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் இவர்கள் இத்தகைய வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 ¾ பவுன் நகை, 2 செல்போன், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.