செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் மரணம்

Published On 2017-11-13 17:34 IST   |   Update On 2017-11-13 17:34:00 IST
ஸ்ரீமுஷ்ணம் அருகே அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் வந்ததால் மனம் உடைந்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீமுஷ்ணம்:

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அம்பிகா (வயது 41).

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அம்பிகா வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அம்பிகா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அம்பிகாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அம்பிகா வி‌ஷம் குடித்து இறந்தது தெரியவந்தது.

Similar News