செய்திகள்
ஜெயங்கொண்டம் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜெயங்கொண்டம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைபள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் வேலுசாமி மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், டெங்குகாய்ச்சல் அறிகுறிகள், டெங்குவை தடுக்கும் முறைகள், டெங்கு கொசுப்புழு உருவாகும் விதம், வீட்டில் குடிநீரையும் உபயோகபடுத்தும் அனைத்து தண்ணீரையும் பாதுகாப்புடன் மூடிவைத்து பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கமாக கூறினார்.
மாணவ, மாணவிகள் இதனை பொதுமக்களுக்கும் முக்கியமாக பெற்றோர்களிடத்திலும் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி பேசினார்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் முகமுது நிசார், மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சவுந்திரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைபள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் வேலுசாமி மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், டெங்குகாய்ச்சல் அறிகுறிகள், டெங்குவை தடுக்கும் முறைகள், டெங்கு கொசுப்புழு உருவாகும் விதம், வீட்டில் குடிநீரையும் உபயோகபடுத்தும் அனைத்து தண்ணீரையும் பாதுகாப்புடன் மூடிவைத்து பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கமாக கூறினார்.
மாணவ, மாணவிகள் இதனை பொதுமக்களுக்கும் முக்கியமாக பெற்றோர்களிடத்திலும் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி பேசினார்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் முகமுது நிசார், மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சவுந்திரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.