செய்திகள்
செந்துறை அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் பலி
செந்துறை அருகே ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி சுகுணா (வயது 26). அன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
சுகுணாவிற்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவரை செந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காண்பித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.
இந்நிலையில் நேற்று காலை சுகுணா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி சுகுணா (வயது 26). அன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
சுகுணாவிற்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவரை செந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காண்பித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.
இந்நிலையில் நேற்று காலை சுகுணா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.