செய்திகள்
பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் மதி. தொழில் அதிபர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு சென்று இருந்தார்.
இன்று காலை அவர்கள் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 37 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பானுமதி. இவர் மகாலட்சுமி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பானுமதி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.