செய்திகள்

மீன்சுருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி பலி

Published On 2017-10-22 14:15 GMT   |   Update On 2017-10-22 14:16 GMT
மீன்சுருட்டி அருகே நடந்து சென்ற பெண் வியாபாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வளவனேரியை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி தேவகி(60). இவர் தினசரி கும்பகோணம் சென்று பூ வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்தார்.

சம்பதன்று மீன்சுருட்டி வீரசோழபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தேவகி பலியானார்.

இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News