செய்திகள்

மடிப்பாக்கத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடிய 2 பேர் கைது

Published On 2017-10-22 10:25 GMT   |   Update On 2017-10-22 10:25 GMT
மடிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சோழிங்கநல்லூர்:

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப் பிரகாஷ். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது வீட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு 65 பவுன் நகை ரூ. 3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் திருநெல்வேலியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் திருநெல்வேலி சென்று அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சங்கரன்கோவில் பணவடலிசத்திரம் பகுதியை சேர்ந்த குமார், மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த பாண்டி என்று தெரியவந்தது. அவர்களை பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ் பெக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர் களிடம் இருந்து 31 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News