செய்திகள்

மீன்சுருட்டி அருகே விஷம் குடித்த விவசாயி பலி

Published On 2017-10-21 13:48 GMT   |   Update On 2017-10-21 13:48 GMT
மீன்சுருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள குலோத்துங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயியான இவருக்கு திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், நேற்று குடிபோதையில் விஷம் குடித்துள்ளார்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார்.

இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News