செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே வி‌ஷம் குடித்து முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-10-21 16:55 IST   |   Update On 2017-10-21 16:55:00 IST
ஆப்பக்கூடல் அருகே மனவேதனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி அடுத்த கருப்பண்ணன் கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 76).

இவரது மனைவி நல்லம்மாள் (65). அதே பகுதியில் அவர்கள் தோட்டத்தில் விவசாயம் பார்த்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் உள்ளனர்.

கந்தசாமிக்கு கடந்த 10 ஆண்டுகளாக கால் வலி மற்றும் வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மன வருத்தத்தில் இருந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த கந்தசாமி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை (வி‌ஷம்) எடுத்து குடித்து விட்டார்.

இதனால் நுரையுடன் வாந்தி எடுத்தார். இதை கண்ட அவரது மனைவி நல்லம்மாள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அவரை மீட்டு கருல்வாடி புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News