செய்திகள்

ஜெயங்கொண்டம் பகுதியில் சாலை விதிகளை மீறிய 294 பேர் மீது வழக்கு

Published On 2017-10-16 20:18 IST   |   Update On 2017-10-16 20:18:00 IST
ஜெயங்கொண்டம் பகுதியில் சாலை விதிகளை மீறிய 294 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.39 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தற்போது வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு போலீசார் வாகன தணக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக வேகம், அதிக பாரம் ஏற்றுவது, போதையில் வானம் ஓட்டுவது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது, லோடு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, லாரிகளில் அதிக உயரம் ஏற்றி பாரம் சென்றது.

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் ஓட்டியது,ஹெல்மெட் அணியால் இருசக்கரவாகனம் ஓட்டியது, பைக்கில் மூன்றுபேர் சென்றது, இன்சூரன்ஸ் இல்லாமல் வானம் ஓட்டியது உள்ளிட்ட பல வகையான சாலை விதிகளை மீறியவர்கள் 294 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.39 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Similar News